புதன், 14 டிசம்பர், 2011

குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள்



குடிநீர் பாட்டலில் இரகசிய எண்கள் - எச்சரிக்கை!





நம்மில் பெரும்பாலோனோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம் . Aquafina, Kinley, Bislery மேலும் இது போல பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துகிறோம் .



இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதுண்டு ஆனால் இந்த பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள இரகசிய எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை .



அனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் 1 முதல் 7 வரையிலான எண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும்.இந்த எண்கள் அந்த பாட்டில் எந்த வேதிப்பொருளை கொண்டு தயாரிக்கப்பட்டது என்பதை உணர்த்தும்.





கீழ்கண்ட படத்தில் எண்களும் அதற்கான வேதிப்பொருளின் பெயரும் இடம் பெற்றுள்ளது :




குறிப்பிடும்படியாக கிராமங்களில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாட்டில்களில் குடி நீரை நிரப்பி பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள் . இதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் .



மேலும் புதிதாக வாங்கிய குடிநீர் பாட்டில்களையும் வெயில்படும் இடங்களில் வைக்கக்கூடாது .அப்படி வைத்தால் நீரில் வேதிப்பொருட்கள் எளிதில் கலந்துவிடும் .



இவற்றில் 1,3,6 ஆகிய எண்கள் பொறிக்கப்பட்டுள்ள பாட்டில்கள் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை .



ஆகவே இனிமேல் தண்ணீர் பாட்டில் வாங்கும்போது கம்பெனி பெயரை பார்த்து அடியிலுள்ள எண்களையும் கவனித்து வாங்குங்கள் .தண்ணீர் காலியானதும் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அதை அப்புறப்படுத்துங்கள்.

நன்றி: திரு.பாலா

சனி, 24 செப்டம்பர், 2011

மோடி VS அத்வானி பிரதமர் பதவியைக் குறிவைத்து ஒரு நாடகம்

மோடி VS அத்வானி பிரதமர் பதவியைக் குறிவைத்து ஒரு நாடகம்



மதநல்லிணக்கம், சமூக அமைதியை வலியுறுத்தி நரேந்திர மோடி மூன்று நாள் உண்ணாவிரதம் இருந்த செய்தி நடுநிலையாளர்களிடையே கடும் அதிருப்தியையும் கேலிச் சிரிப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.


இருபத்தோறாம் நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்தி 2002ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்து வரலாற்றில் அழியாத இழிவைப் பெற்றுவிட்ட நரவேட்டை நரேந்திர மோடியின் உண்ணாவிரதம் நாட்டு மக்களால் நகைப்புக்குரியதாக கருதப்பட்டதில் வியப்பில்லை. ஆடுகளுக்காக ஓநாய் ஒன்று கண்ணீர் வடிப்பதைப் போல இந்த செயல் அமைந்ததாக சமூக ஆர்வலர்கள் வேதனைத் தெரிவித்தனர்.

2002 பிப்ரவரி 28ஆம் தேதி நிகழ்ந்த இனப்படுகொலையில் குதறப்படும் கதறலுடன் குல்பர்க் என்ற குடியிருப்பினுள் புகுந்து அடைக்கலம் புகுந்த மக்களை பின்னால் விரட்டிச் சென்று சமூக விரோதிகள் அப்பாவி முஸ்லிம்களை படுகொலை செய்தனர். அடைக்கலம் தேடி வந்த மக்களைப் படுகொலை செய்ய முயன்ற பாதகர்களை தடுத்து நிறுத்தினார் கோத்ரா நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்சான் ஜாஃப்ரி.

கட்டுக் கட்டாக கரன்சி நோட்டுக்களை கலவரக்காரர் களின் முன் வைத்து இவற்றை எடுத்துக் கொண்டு அப்பாவிகளை விட்டு விடுங்கள் என்று கெஞ்சினார் இஹ்சான் சான் ஜாஃப்ரி. அவரது கெஞ்சலையும் உருக்கமான வேண்டுகோளையும் அலட்சியப்படுத்திய அந்த மனித மிருகங்கள் அந்த அப்பாவிகளைக் கொன்றதோடு அவர்களுக்கு ஆதரவாக புறப்பட்ட இஹ் ஜாஃப்ரியையும் துண்டு துண்டாக வெட்டிக் கொன்றும் அவரது ஆணுறுப்பையும் வெட்டி சிதைத்து நெருப்பில் போட்ட கொடூரமும் யாராலும் மறக்க முடியாதது.

இந்தக் கொடூரங்களுக்கு காரணமானவர்கள் மீதும், அந்த கொலைப்படையின் தலைவனும் குஜராத் முதல் அமைச்சருமான மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி உச்சநீதிமன்றத்தினை அணுகினார். அவரது நீண்ட சட்டப்போராட்டத்தின் விளைவாக அவரது முறையீட்டினை உச்சநீதி மன்றம் ஏற்றுக் கொண்டு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது.

அந்த சிறப்பு புலனாய்வுக்குழு முன் குஜராத் முன்னாள் புலனாய்வு காவல்துறை அதிகாரி சஞ்சீவ்பட் உள்ளிட்டவர்கள் அளித்த வாக்குமூலங்கள் நாட்டை யே அதிர்ச்சியடைய வைத்தது. மோடியின் கோர முகத்தை தோலுரித்துக் காட்டியது.

உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக்குழு விரைவில் அறிக்கையினை வெளியிட்டு உண்மைகளை உலகிற்கு வெளிப் படுத்தும் என எதிர்பார்த்த சூழலில் உச்சநீதிமன்றம் திடீரென ஓர் அறிவிப்பினை வெளியிட்டது. அதன்படி மோடி மீதான வழக்கில் விசாரணை நீதிமன்றத்தின் கீழ் வருவது மட்டுமே உச்சநீதிமன் றத்தின் வேலை அல்ல என்று அறிவித்ததோடு குஜராத் மாநிலத்தின் கீழ் நீதிமன்றம் விசாரிக்கும் என்றும் கூறினர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.

குஜராத் நீதிமன்றங்களின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் உச்சநீதிமன்ற அறிவிப்பு தனக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் கூறினார் நீதிக்காக வேண்டி போராடிய மூதாட்டி ஜாக்கியா ஜாஃப்ரி.  இருப்பினும் முழுமையான விசார ணைகளை செய்யும் பொறுப்பு உச்சநீதிமன்றத்தின் பணி அல்ல, கீழ் நீதி மன்றங்களின் பணியே என்றும் கருத்துக்கள் சொல்லப் பட்டன.

அகமதாபாத் கீழ் நீதிமன்றத்தின் விசாரணைகளை சிறப்பு புலனாய்வுக் குழு கண்காணிக்கும் என்ற  உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பு மோடியை பரிசுத்தமானவர் என்று கூறிடவில்லை என்று சட்டநிபுணர்களாலும் கற்றறிந் தவர்களாலும் தெளிவாக கூறப்பட்டது. இருப்பினும் மோடி ஆதரவு ஊடகங்கள் மோடியை இனக்கலவரங்களில் ஈடுபட்டவர் இல்லை என்றும், மனிதப்புனிதர் என்றும் உச்சநீதிமன்றமே புகழாரம் சூட்டிவிட்டதைப் போல போலியான பரப்புரைகளை பா.ஜகவில் உள்ள மோடி ஆதரவு முகாமும் சில அரை வேக்காட்டு ஊடகங்களும் பரப்பத் தொடங்கின. மோடியும் தான் உத்தமர் என்று உலகம் அறிவித்துவிட்டதைப் போலவே ஆர்ப்பாட்டம் செய்தார்.

ட்விட்டர் இணையதளத்தில் நிஷீபீ வீs நிக்ஷீமீணீt என்று ரொம்ப நல்லவர்போலும் பாவ காரியங் களை வாழ்க்கையில் ஒரு நாள் கூட செய்யாதவர் போலும் புனிதர் வேடம் போட்டார்.

உச்சநீதிமன்ற அறிவிப்பினை தனக்கு சாதகமானதாக காட்டிக் கொண்ட மோடியை உத்தமர் என்ற கனவுலகில் திளைக்க வைப்பதற்கான வேறொரு (கெட்ட) காரியமும் செப்டம்பர் ஒன்றாம் தேதி நடந்தது.

இந்தியாவின் மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளை மதிப்பீடு செய்கிறோம் என்று தம்பட்டம் அடிக்கும் அமெரிக்க காங்கிரஸனல் ரிசர்ச் சர்வீஸ் என்ற சுயேச்சையான அமைப்பு கொள்கை உருவாக்கம் தொடர்பாக பல்வேறு நாடுகளின் நிலைமையை ஆய்வு செய்து வருகிறதாம். இது அமெரிக்காவுக்கும் பல்வேறு நாடுக ளுக்கும் இடையிலான உறவுகளை நிர்ணயிப்பதில், தீர்மானிப் பதில் முக்கிய பங்குவகிக்கிறது.

அதாவது அமெரிக்காவின் நலனைக்காக்க எதிர்கால லட்சியம் குறித்து முடிவெடுக்க சி.ஆர்.எஸ் என்ற அமைப்பு சில ஆய்வுகளை வெளியிடும். அதன்படி, தற்போ தைய வெளியீட்டில் மோடி சிறந்த பொருளாதார மேதையாகவும், அடுத்த பிரதமராகவும் வர வாய்ப்புள்ள தலைவர் என்று அது தனது கணிப்பினை வெளியிட்டது.

அமெரிக்க காங்கிரசனல் ரிசர்ச் சர்வீஸின் அறிக்கை ஒன்றும் அபூர்வமான அறிக்கை அல்ல. இது வெறும் மாதாந்திர அறிக்கை மட்டுமே. இதற்கே மோடியின் ஆதரவு கும்பல் வானத்திற்கும் பூமிக்குமாக குதித்து ஆர்ப்பாட்டம் செய்தது.

மோடி மாபெரும் தலைவர்;  வருங்காலப்பிரதமர் என்றெல்லாம் கூச்சல்கள் எழுந்தன. அமெரிக்க காங்கிரஸின் இந்த அறிக்கைக்கு புதிதாக வியாக்கியானங்கள் வெளிப்பட்டு மோடியை வானளாவ உயர்த்த இப்போது என்ன அவசியம் வந்தது.?
மத உரிமைகளுக்கு எதிரான குற்றம் இழைத்தவர் எனக்கூறி மோடி அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

மோடியின் மீதான கறையைக் (!) களைய அமெரிக்காவில் சில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப் படுகிறது. அமெரிக்க காங்கி ரசனல் ரிசர்ச் சர்வீஸ் அறிவிப்பு செப்டம்பர் முதல்வாரம் வெளியாகிறது. மோடி தொடர் பாக உச்சநீதிமன்றத்தில் அறிவிப்பு வெளியானது, அதனை வைத்து உச்சநீதிமன்றமே தனக்கு புனிதர் பட்டம் வழங்கிவிட்டதாக தம்பட்டம் அடித்துக் கொண்டது, அதனைத் தொடர்ந்து உண்ணாவிரத நாடகம் போட்டது என அனைத்துக்கும் ஒரு வலுவான பின்னணி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

ஒரே ஒரு தடவை பிரதமர் பதவி சுகத்தை ருசித்து இனி என்றுமே அந்தப்பதவியை நெருங்க முடியாத பா.ஜ.கவில் ஏராளமான பிரதமர் வேட்பாளர்கள் காத்திருப்பு பட்டியலில் இருந்து வருகிறார்கள். பாப்ரி மஸ்ஜித் இடிப்புப் புகழ் அத்வானி முதல் பெல்லாரி சுரங்க மன்னர்களான ரெட்டிகளின் தோழி சுஷ்மாசு வராஜ், கர்ர்ப்ரேட்டுகளின் நண்பர் அருண்ஜேட்லி, போன்ற வர்களோடு ஓநாய் பார்வையோடு மோடியும் களத்தில் நிறுத்தப் பட்டார்.

ஆனால் அத்வானியை விட படுபயங்கர இமேஜ் கொண்ட மோடி மீது அக்கறை கொண்ட சில சக்திகள் மோடியின் பிம்பத்தின் மீது படிந்துள்ள இனக்கலவரம் என்ற இமேஜை மறைக்க, அதனை இந்திய மக்கள் மறக்கவும் மோடி திடீர் உண்ணாவிரதம் என்ற பெயரில் மூன்று நாள் நாடகத்தை அறிவித்து அதனை கடும் எதிர்ப்புகளுக்கும் ஆதரவாளர்களின் ஆரவாரங் களுக்கிடையே முடித்துக் கொண் டார். அவரது உண்ணாவிரதம் எடுபடாமல் போனது. எனினும் மோடியை பிரதமராக்கியே தீருவோம் என ஊடகபிற்போக்கு வாதிகளும் கார்ப்பரேட் கொள்ளையர்களும் முடிவு கட்டிக் கொண்டு செயல்பட்டனர்.

இருப்பினும் மோடியின் இனவெறி இமேஜினால் மோடி எந்தக் காலத்திலும் குஜராத்திற்கு வெளியே போனியாக மாட்டார் என்ற உண்மையை ஆரம்பித்ததும் மோடியை மகாத்மாவாக்கியே தீருவோம் என்ற திட்டத்துடன் உண்ணாவிரத நாடகத்திற்கு ஒத்துழைப்பு தந்ததோடு மோடியை வாழ்த்தி போற்றி புகழ்பாடும் முழுபக்க விளம்பரம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெளி யாகும் நாளிதழ்களில் வெளி வந்தன.

முழுபக்க விளம்பரம் என்ற பெயரில் கோடிக்கணக்காக ரூபாய் குஜராத் மக்களின் வரிப்பணம் ஏராளமாக வாரி இறைக்கப் பட்டது. அந்தப் பணத்திற்கு மயங்கி வாலாட்டும் நாலுகால் பிராணியைப் போல ஊடகங்கள் மோடியை வானைவிட புகழ்ந்தன. இது இலங்கை பிரச்சினையில் ஜெயவர்த்தனே தொடங்கி ராஜபக்ஷே வரை வீசிய எலும்புத்துண்டுகளுக்காக சில தமிழக ஊடகங்கள் செயல்பட்டதைப்போல தற்போது இந்தியா முழுவதும் பல்வேறு ஊடகங்களும் செயல்பட்டு, குஜராத் நரபலி மோடியின் புகழ்பாடின.

மோடியின் உண்ணாவிரதத்திற்கு எதிராக குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர்கள் சங்கர்சிங் வகேலா, அர்ஜூன் மொத்வாடியா உள்ளிட் டவர்கள் சபர்மதி ஆசிரமம் முன்பாக உண்ணாவிரதம் இருந்தனர்.

மோடியின் உண்ணாவிரத நாடகத்தைக் கண்டித்து குஜராத் இனப்படுகொலையில் நரோடா பாட்டியாவில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லிம்களின் உறவினர் கள் தர்ணா போராட்டம் நடத்தப்புறப்பட்டனர். போராட்டக் குழுவினரோடு இந்திய விண்வெளி இயலின் தந்தையான விக்ரம் சாராபாயின் மகள் மல்லிகா சாராபாய் மற்றும் ஜன்சங்கர் மஞ்ச்சின் தலைவரும் பாதிக்கப்பட்ட மக்களின் வழக்கறிஞருமான முகுல்சின்கா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த தேசத்தில் ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் ஐந்து கோடி மக்கள் தவிக்கின்றனர். ஒருநாளைக்கு இருபது ரூபாய் கூட தினக்கூலி பெறமுடியாத அவலநிலையில் லட்சோபலட்சம் இந்தியர்கள் வாடிவரும் நிலையில் 180 கோடி செலவழித்து 5 நட்சத்திர பாணியிலான உண்ணாவிரதம் இருந்த மோடி, ஏழை இந்தியர்களை அவமானப்படுத்தியிருக்கிறார்.
மோடியை வாக்குசீட்டின் மூலமும் சட்டப்படியும் தண்டி க்க ஒட்டுமொத்த இந்தியா காத்திருக்கிறது.

--ஹபிபா பாலன் (from TMMK WEBSITE)

சனி, 17 செப்டம்பர், 2011

இஸ்லாம் என்ற இயக்க வெறியில் இதை படியுங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும்.
 
பாப்புலர் ஃப்ரென்ட் ஆஃப் இந்தியாவும் அதன் அரசியல் கட்சியான எஸ்.டி.பி.ஐ யும் தமிழகத்தில் வளர்ச்சி அடைந்தால் என்ன நிலை??
 அண்மையில்  நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலின் முடிவு எலெக் ஷன் கமிஷனின் வெப் சைட்டில் உள்ளது. அதிகாரப் பூர்வமாக வெளியிடப் பட்ட ஓட்டு எண்ணிக்கை. இதில் முஸ்லிகளின் பிரதிநிதிகள் நாங்கள் தான் என்று மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீஃக் ( முஸ்லிம் லீஃக் என்று ஊரை ஏமாற்றி திமுக சின்னத்தில் நின்று தோல்வி அடைந்தார்கள் )பாப்புலர் ஃப்ரென்ட் ஆஃப்  இந்தியா (SDPI) முதலான கட்சிகள் நின்றன. அவை பெற்ற ஓட்டுக்கள் விவரம்.  நாம் அதில் இருந்து சில விஷயங்களை பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
1)   சேப்பாக்கம்
மமக -55000, திமுக 64000, ஐ.என்.எல்(INL) முஸ்லிம் 1200
2)  ஆம்பூர் 
மமக 60000காங்கிரஸ்  55000
3)  ராமநாதபுரம்  
மமக 66000காங்கிரஸ் 50000,  பீஜேபி 28000, ஐ.என்.எல்  முஸ்லிம் 3600, எம்.என்.பி (SDPI)2700.    ராமநாதபுரத்தில் SDPI நிற்பதாக சொன்னார்கள். ஆனால் அரசாங்க ரிப்போர்ட்டில் பெரோஸ் ஃகான் என்ற பெயர் சுயேச்சை என்றுதான் உள்ளது.
4) சென்னை துறைமுகம்
அதிமுக 54000, திமுக 33600, பீஜேபி 4800, எம்.என்.பி(SDPI) 2200
5) திருப்பூர்
சிபிஎம் 75000, காங்கிரஸ் 37000, பீஜேபி 4400, எம்.என்.பி(SDPI) 2650
6) கோவை தொண்டாமுத்தூர்
அதிமுக 99900, காங்கிரஸ் 46000, பீஜேபி 6000, எம்.என்.பி(SDPI) 4500
7) கடைய நல்லூர்
 எம்.என்.பி(SDPI) 6600,   அதிமுக 81000, காங்கிரஸ் 65000
8) பூம்புஹார்
அதிமுக 86000, பமக 74500, எம்.என்.பி(SDPI) 3000
9) காரைக்கால் டி.ஆர் பட்டிணம்
சுயேச்சை 8860, திமுக 8500, அதிமுக 2100, எம்.என்.பி(SDPI) 243
  
ஒரே ஒரு விஷயம் நாம் அனைவரும் புரிந்து கொள்வது நன்மையானதாக அமையும். மமக சரியில்லை என்று வேறு ஒரு இயக்கத்தை வளர்க்க நினைப்பவர்கள், நம் சமூகத்தின் பலத்தை மறுபடியும் 10 - 20 ஆண்டுகள் செலவு செய்து, அதன் பின்னர் தான் மமக தற்போதுள்ள நிலையை அடைய இயலும். எனவே, இருக்கும் இயக்கங்களில் முன்னணியில் உள்ள மமகவை சரி செய்வது தான் சாலச் சிறந்ததாக அமையும். 
ராமநாதபுரத்தில் உதாரணமாக SDPI வளர்ந்தால் என்ன ஆகும்இன்று 28000 ஓட்டுக்கள் வாங்கியுள்ள பிஜேபியின் வெற்றிக்கே அது வழி வகுக்கும்.  அப்போதும் இந்த இயக்கத்திற்கு(SDPI) நிச்சயம் மலக்குகள் தலைமை நிர்வாகிகளாக இருக்கப் போவதில்லை. யாரேனும் ஒரு தமிழக முஸ்லிம் தான் தலைவராக இருக்கப் போகிறார். அதிமுகவுடனோ, திமுகவுடனோ அல்லது சற்றும் இந்த இருவரின் சிந்தனையில் இருந்து மாறுபடாத தேமுதிகவுடனோ தான் நாம் கூட்டணியாக இருந்து அரசியல் நடத்த இயலும். எனவே மமக, எஸ்டிபிஐ, லீஃக் என்ற பெயரை விட நாம் முஸ்லிம்கள் என்ற ஒரு அடையாளத்துடன் இருப்பது தான் சிறந்ததாக அமையும். அதற்கு இன்று மமக தான் சரியான இயக்கமாக உள்ளது. 
எனவே சமூக ஆர்வலர்கள் இந்த ஜமாத்தை குறைந்த பட்சம் அரசியல் ரீதியாக பலப் படுத்த வேண்டும். இல்லை முடியாது, தமுமுக, மமகவினர் சரியில்லை. அந்த விஷயத்தை அப்படி செய்திருக்கலாம். இந்த விஷயத்தை இப்படி செய்திருக்கலாம். எங்கள் இயக்கம் அது மாதிரி இல்லை. எங்களை வழி நடத்துபவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் என்று மனதில் நினைத்துக் கொண்டு செயல் பட்டால், முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரத்தை வீணடிப்பதற்கு சமம். 
மேலும் எப்படி சகோ.பீஜேயின் 2004 பிரிவு ஒரு பின்னடைவாக அமைந்ததோ, அது போல் தான் இதுவும் ஒரு பின்னடைவாக அமையும். நம் எதிரி இன்று நம்மை விட பல மடங்கு பலசாலி ஆகிவிட்டான். (அல்லாஹு அக்பர்)  இப்போது தான் நாம் யார் சொன்ன கலிமா சரியென்று போட்டி போட ஆரம்பித்துள்ளோம். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். நிச்சயமாக கேரளாவில் இருக்கும் சூழல் தமிழகத்தில் இல்லை. அவர்கள் செய்யும் அரசியலை நாம் இங்கு செய்ய இயலாது. செய்தால் நன்மையாக முடியாது. 
டில்லியின் சூழ்நிலைக்கு ஏற்ப மத்திய அரசில் சில விஷயங்களில் அவர்களுடன் கை கோர்க்கலாம். நிச்சயமாக கேரள மக்களின் தலைமையில் நாம் தமிழகத்தில் இயங்க முடியாது. எப்படி இந்தியாவில் நம் மாநிலத்தில் மட்டும் 2 திராவிட கட்சி தனித் தன்மையாக உள்ளதோ (பெயரளவிலாவது) அது போல் தான் தமிழக முஸ்லிம்களும் இயங்க முடியும்.
இஸ்லாம் என்ற இயக்க வெறியில் இதை படியுங்கள். தமுமுக / மமக இயக்க வெறியில் அல்ல. நம் எண்ணங்களை அல்லாஹ் ஒருவனே நன்கு அறிய முடியும். அதற்கேற்ப நமக்கு நன்மைகள் கிடைக்கும்.

புதன், 22 ஜூன், 2011

அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்

بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
கண்ணியத்திற்குரிய சகோதரர்களே!
இஸ்லாம் கூறும் வழிமுறைகளின்படி நம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, அன்றாடம் நம்முடைய அடைப்படை செயல்களில் போது கடைபிடித்து ஓத வேண்டிய துஆக்களை இங்கே தொகுத்தளித்துள்ளோம். இஸ்லாம் கூறும் வழி நம் ஒவ்வொருவரது வாழ்வையும் அமைத்துக் கொள்ள வல்ல நாயன் அல்லாஹ் அருளவானாக.
1. தூங்கும் போது ஓதும் துஆ:
اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا
அல்லாஹும்ம பி(இ)ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா
பொருள்: இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்)
ஆதாரம்: புகாரி 6325, 6324, 6314
2. தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ:
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(இ)ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்
பொருள்: எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.
ஆதாரம்: புகாரி 6312, 6314, 6324, 6325, 7395
3. கழிவறையில் நுழையும் போது ஓதும் துஆ:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ
அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மினல் குபு(இ)ஸி வல் கபா(இ)யிஸி.
ஆதாரம்: புகாரி 6322
பொருள் : இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
4. கழிவறையிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ:
غُفْرَانَكَ
ஃகுப்(எ)ரான(க்)க
பொருள் : உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: திர்மிதீ 7
5. வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஓதும் துஆ:
بِسْمِ اللَّهِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ
பி(இ)ஸ்மில்லாஹி ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய
ஆதாரம்: நஸயீ 5391, 5444
பொருள் : அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
6. பள்ளிவாசலுக்குள் நுழையும் போது ஓதும் துஆ:
اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
பொருள் : அல்லாஹும்மப்(எ)தஹ் லீ அப்(இ)வாப(இ) ரஹ்ம(த்)தி(க்)க பொருள் : இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக.
ஆதாரம்: முஸ்லிம் 1165
7. தொழுகைக்கு ஊளூ செய்யும் போது ஓதும் துஆ:
بِسْمِ اللَّه
பி(இ)ஸ்மில்லாஹ்
பொருள்: அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும்.
8. உளூச் செய்து முடித்த பின் ஓதும் துஆ:
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்(இ)துல்லாஹி வரஸுலுஹு
பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக நம்புகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 345
9. பாங்கு சப்தம் கேட்டால்
பாங்கு சொல்லும் சப்தம் கேட்டால் முஅத்தின் கூறுவதை நாமும் திருப்பிக் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்:புகாரி 611
பாங்கு முடிந்தவுடன் ஓதும் துஆ:
பாங்கு ஓதி முடிந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதி விட்டு பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓத வேண்டும்.
اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ
அல்லாஹும்ம ரப்ப(இ) ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ப(எ)ளீல(த்)த வப்(இ)அஸ்ஹு மகாமன் மஹ்மூதன் அல்லதீ வஅத்தஹு பொருள் : இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலையான தொழுகைக்கும் சொந்தக்காரனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு (சொர்க்கத்தின் மிக உயர்ந்த பதவியான) வஸீலா எனும் பதவியினையும், சிறப்பையும் வழங்குவாயாக! நீ அவர்களுக்காக வாக்களித்த புகழப்பட்ட இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!
ஆதாரம்: புகாரி 614, 4719
10. பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப(எ)ழ்ளி(க்)க
பொருள் : இறைவா! உனது அருளை வேண்டுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 1165
11. சாப்பிடும் போதும், பருகும் போதும் ஓதும் துஆ:
بِسْمِ اللَّه
பி(இ)ஸ்மில்லாஹ்
பொருள்: அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும்.
ஆதாரம்: புகாரி 5376, 5378
12. சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் ஓதும் துஆ:
بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ
பிஸ்மில்லாஹி பீ(எ) அவ்வலிஹி வ ஆகிரிஹி எனக் கூற வேண்டும். ஆதாரம்: திர்மிதீ 1781
13. சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும் ஓதும் துஆ:
الْحَمْدُ لِلَّهِ
அல்ஹம்து லில்லாஹ்
பொருள்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.
ஆதாரம்: முஸ்லிம் 4915
14. உணவளித்தவருக்காக ஓதும் துஆ:
اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ
அல்லாஹும்ம பா(இ)ரிக் லஹும் பீ(எ)மா ரஸக்தஹும் வஃக்பி(எ)ர் லஹும் வர்ஹம்ஹும்.
பொருள் : இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக.
ஆதாரம்: முஸ்லிம் 3805
15. பயணத்தின் போது ஓதும் துஆ:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர் எனக் கூறுவார்கள். பின்னர்
سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ
ஸுப்(இ)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(இ)னா லமுன்கலிபூன். அல்லா ஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(எ) ஸப(எ)ரினா ஹாதா அல்பி(இ)ர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(எ)ரனா ஹாதா வத்வி அன்னா பு(இ)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(இ) பி(எ)ஸ்ஸப(எ)ரி வல் கலீப(எ)(த்)து பி(எ)ல் அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(எ)ரி வகாப (இ)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(இ) பி(எ)ல் மாலி வல் அஹ்லி எனக் கூறுவார்கள்.
பொருள் :அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 2392
16. பயணத்திலிருந்து திரும்பும் போது ஓதும் துஆ:
மேற்கண்ட அதே துஆவை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து
آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ
ஆயிபூ(இ)ன தாயிபூ(இ)ன ஆபி(இ)தூன லிரப்பி(இ)னா ஹாமிதூன்.
பொருள் : எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம்.
ஆதாரம்: முஸ்லிம் 2392
17. தும்மல் வந்தால் ஓதும் துஆ:
தும்மல் வந்தால் தும்மிய பின்
الْحَمْدُ لِلَّهِ
அல்ஹம்து லில்லாஹ் எனக் கூற வேண்டும்.
பொருள் : எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
அல்ஹம்துலில்லாஹ் என தும்மியவர் கூறுவதைக் கேட்டவர்
يَرْحَمُكَ اللَّهُ
யர்ஹமு(க்)கல்லாஹ் எனக் கூற வேண்டும்.
பொருள் : அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!
இதைக் கேட்டதும் தும்மியவர்
يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ
யஹ்தீ(க்)குமுல்லாஹு வயுஸ்லிஹு பா(இ)ல(க்)கும் எனக் கூற வேண்டும்.
பொருள் : அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக!
ஆதாரம்: புகாரி 6224
18. பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ:
கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ(இ) லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்(இ)து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(இ)(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ(இ)வு ல(க்)க பி(இ)னிஃமதி(க்)க அலய்ய, வஅபூ(இ)வு ல(க்)க பி(இ)தன்பீ(இ) ப(எ)க்பி(எ)ர்லீ ப(எ)இன்னஹு லா யஃக்பி(எ)ருத் துனூப(இ) இல்லா அன்(த்)த இதன் பொருள் :
இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது.
ஆதாரம்: புகாரி 6306

" And whosoever fears Allah and keeps his duty to Him, He will make a way for him to get out (from every difficulty).
And He will provide him from (sources) he never could imagine.
And whosoever puts his trust in Allah,then He will suffice him. Verily, Allah will accomplish his purpose. Indeed Allah has set a measure for all things.

(At-Talaq 65:2-3)"


(மனிதர்களே!) நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கையெல்லாம் விளையட்டும், வீணும், அலங்காரமும், (அது) உங்களுக்கிடையில் பெருமையடித்துக் கொள்வதும், செல்வங்களிலும், பிள்ளைகளிலும் (ஒருவருக்கொருவர்) அதிகப்படுத்திக் கொள்வதும்தான்; (இந்நிலை) ஒரு மழையைப் போன்றாகும். (அதன்மூலம் முளைத்த) பயிர்கள் நன்கு வளர்ந்து விவசாயிகளை அதிசயத்தில் ஆழ்த்தியது; பின்னர், அது காய்ந்து விடுகிறது; (அப்போது) அதை மஞ்சளாகி விடுவதை நீர் காண்கின்றீர்; பின்னர், அது சருகுகளாகி விடுகின்றது (இவ்வுலக வாழ்க்கையும் அவ்வாறே இருக்கிறது). மறுமையிலோ, (அவர்களில் பலருக்குக்) கொடிய வேதனையும், (சிலருக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், பொருத்தமும் கிடைக்கின்றன. ஆகவே, இவ்வுலக வாழ்க்கை (மனிதனை) மயக்கும் (சொற்ப) இன்பமேயன்றி வேறில்லை.
-அல்குர்ஆன் 57:20

>>>>அபு ஹிபா<<<<<

புதன், 18 மே, 2011

யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!

மகளின் தயவில் தாய்


ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின்
அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 4777, 50


பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்

'வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை
மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு
நாளின் அடையாளங்களில் ஒன்று'' என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4777

ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி
வாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்)
குறிப்பிட்டார்கள்.

நூல்: புகாரி 50

குடிசைகள் கோபுரமாகும்

இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர்.
இதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
குறிப்பிட்டார்கள்.

நூல் : புகாரி 7121

விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்

யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் என்று
நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.

நூல் : புகாரி 80, 81, 5577, 6808, 5231

தகுதியற்றவர்களிடம் பொறுப்பு

'நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று நபிகள்
நாயகம் அவர்கள் கூறிய போது 'எவ்வாறு பாழ்படுத்தப்படும்?'' என்று ஒருவர்
கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தகுதியற்றவர்களிடம் ஒரு
காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று
விடையளித்தார்கள்.

நூல் : புகாரி 59, 6496

பாலை வனம் சோலை வனமாகும்

செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும்
கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக
மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது

நூல் : முஸ்லிம் 1681

காலம் சுருங்குதல்

காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று)
ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும்.
(இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு
விநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம்.

நூல் : திர்மிதீ 2254)

கொலைகள் பெருகுதல்

கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம்
(ஸல்) கூறியுள்ளனர்.

நூல் : புகாரி 85, 1036, 6037, 7061

நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்

பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள்
நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.

நூல்: புகாரி 1036, 7121

பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது

மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின்
அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.

நூல்கள் : நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731, அஹ்மத் 11931, 12016,
12079, 12925, 13509.

நெருக்கமான கடை வீதிகள்

கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம்
என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல்: அஹ்மத் 10306


பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்

பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின்
அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல்: புகாரி 81, 5231, 5577, 6808


ஆடை அணிந்தும் நிர்வாணம்

ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல்
தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும்.

நூல் : முஸ்லிம் 3971, 5098


உயிரற்ற பொருட்கள் பேசுவது

விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு
வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும்
நபிமொழி.

நூல்: அஹ்மத் 11365

பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்

தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர் கள் தோன்றும்
வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

நூல்: அஹ்மத் 1511

தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்

தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம் என்று
நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல்: ஹாகிம் 4/493

பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்

பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று
நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

நூல்: ஹாகிம் 4/493

சாவதற்கு ஆசைப்படுதல்

இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல்
செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும்
நபிமொழி.

நூல்: புகாரி 7115, 7121

இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்

ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக
முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.

நூல்: புகாரி 3609, 7121

முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்

'உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள்
பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால்
நீங்களும் நுழைவீர்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
'அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது
யூதர்களையும், கிறித்தவர்களையுமா?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'வேறு யாரை (நான்
குறிப்பிடுகிறேன்)'' என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 3456, 7319

யூதர்களுடன் மாபெரும் யுத்தம்

யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த
யுத்தத்தின் போது 'முஸ்லிமே இதோ எனக்குப் பின் னால் யூதன் ஒருவன்
ஒளிந்திருக்கிறான்'' என்று பாறைகள் கூறும்.

நூல்: புகாரி 2926

கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்

கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் 'கால்கள்
சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்'' என்பது நபிமொழி.

நூல் : புகாரி 5179

யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்

யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக்
காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி.

நூல் : புகாரி 7119

கஹ்தான் இன மன்னரின் ஆட்சி

(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால்
மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.

நூல் : புகாரி 3517, 7117

அல்ஜஹ்ஜாஹ் மன்னர்

ஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது என்பது
நபிமொழி.

நூல் : முஸ்லிம் 5183

எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்

கடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர் எண்ணிப்
பார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நபிமொழி.

நூல் : முஸ்லிம் 5191

செல்வம் பெருகும்

செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.
நூல் : புகாரி 1036, 1412, 7121

ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக்
கொடுப்பார். 'நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று
எனக்குத் தேவையில்லை'' என்று அந்த மனிதன் கூறிவிடுவான் என்பதும் நபிமொழி.
நூல் : புகாரி 1424

மாபெரும் யுத்தம்

இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள்
ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே
வாதத்தையே எடுத்து வைப்பார்கள்.
நூல் : புகாரி 3609, 7121, 6936

பைத்துல் முகத்தஸ் வெற்றி

யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!

1. எனது மரணம்

2. பைத்துல் முகத்தஸ் வெற்றி

3. கொத்து கொத்தாக மரணம்

4. நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில்
திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு

5. அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்

6. மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம்.
அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12
ஆயிரம் பேர் இருப்பார்கள்.

நூல் : புகாரி 3176

மதீனா தூய்மையடைதல்

துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம்
தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது
என்பது நபிமொழி.

நூல் : முஸ்லிம் 2451

அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை

யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம்
இம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும் என்பது நபிமொழி.

நூல் : முஸ்லிம் 3546

மாபெரும் பத்து அடையாளங்கள்

இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து
விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.

1 - புகை மூட்டம்

2 - தஜ்ஜால்

3 - (அதிசயப்) பிராணி

4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது

5 - ஈஸா (அலை) இறங்கி வருவது

6 - யஃஜுஜ், மஃஜுஜ்

7 - கிழக்கே ஒரு பூகம்பம்

8 - மேற்கே ஒரு பூகம்பம்

9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்

10 - இறுதியாக ஏமனி'லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச்
சென்று ஒன்று சேர்த்தல்

ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள்
நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி),

நூல்: முஸ்லிம் 5162.


புகை மூட்டம்

வானம் தெளிவான புகையை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக!
அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும், இது கடுமையான வேதனையாக
அமைந்திருக்கும்.

(அல்குர்ஆன் 44:10,11)

உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான்.
அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல்
பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனது
செவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்)பிராணி.
மூன்றாவது தஜ்ஜால் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூமாலிக்(ரலி)

நூல்: தப்ரானி

யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை

இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே
அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள்.
(அல்குர்ஆன் 21:96)

ஈஸா(அலை) அவர்களின் வருகை

நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம்
கொள்ளாதீர்கள்! என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும்.
(அல்குர்ஆன் 43:61)

மூன்று பூகம்பங்கள்

(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம், அரபு
தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை
யுகமுடிவு நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி)
நூல்: முஸ்லிம்

பெரு நெருப்பு

எமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின்பால் விரட்டிச்
செல்லும், அதுவரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி)
நூல்: முஸ்லிம்









"எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!” ஆமீன்

திங்கள், 28 மார்ச், 2011

கலைஞரின் முஸ்லிம் விரோதப் போக்கு: ஒரு துரோக வரலாறு! -2வது பாகம்

கலைஞரின் முஸ்லிம் விரோதப் போக்கு: ஒரு துரோக வரலாறு! -2வது பாகம்
Wednesday, 23 March 2011 22:34 .



அரசியல் அதிகாரத்தில் ஒடுக்கப்பட்ட முஸ்லிம்கள்

அமைப்பாக ஒன்றுதிரண்டு, அரசியல் அதிகாரம் பெரும் வாய்ப்புள்ள முஸ்லிம் லீக்கை மக்கள் ஆதரவை இழக்கச் செய்தார் கலைஞர் கருணாநிதி. அடுத்து முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம்கள் மட்டும் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதிகளை, கலைஞரும், முன்னணி தலைவர்களும் போட்டியிடும் தொகுதி யாக மாற்றினார். உதாரணமாக,

துறைமுகம் சட்டமன்ற தொகுதி :

1962-ல் கே.எஸ்.ஜி. ஹாஜா ஷெரிப் (காங்கிரஸ்)
1967-ல் டாக்டர். ஹபிபுல்லா பெய்க் - (முஸ்லிம் லீக்)
1971-ல் திருப்பூர் ஏ.எம். மொய்தீன் (முஸ்லிம் லீக்) - வென்ற தொகுதி - காயிதே மில்லத் மறைவுக்குப் பிறகு 1977 தேர்தலில் செல்வராஜ் என்பவரை நிறுத்துகிறார்.

1977,1980,1984 என மூன்று முறை துறைமுகம் செல்வராஜை நிறுத்தி வெற்றிபெற வைக்கிறார் கருணாநிதி.

1977-ல் ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆர் அவர் மறையும் வரை, இந்த மிகப்பெரிய ராஜதந்திரியால், அரசியல் சாணக்கியரால், ஆட்சிக்கு வர முடியவில்லை. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு 1989-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க ஜெ.அணி - ஜா. அணி பிரிந்த நேரத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தாரே அப்பொழுது அவர் நின்று வென்ற தொகுதி அதே துறைமுகம் தொகுதிதான்.

1989-ல் ஏற்பட்ட ஆட்சி இரண்டே ஆண்டுகளில் கலைக்கப்பட்டது. 1991-ல் வந்த தேர்தலின்போது தேர்தல் பிரச்சாரத்தில் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்ட நிலையில் - திமுக நாடு முழுவதும் படுதோல்வி அடைந்து இரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அது இந்தத் துறைமுகம்தான்.

அதன் பிறகு அந்தத் தொகுதியை விட்டு 1996&ல் வேறு தொகுதிக்கு மாறினார். மீண்டும் முஸ்லிமை நிறுத்துவார் என்று நினைத்தால் இல்லை. கலைஞருக்குப் பிறகு பேராசிரியர் அன்பழகன் நிறுத்தப் பட்டார். 1996, 2001, 2006 என இன்றுவரை அவர்தான் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர்.

துறைமுகத்தை விட்டு வேறு தொகுதிக்கு மாறிய கலைஞர் எந்தத் தொகுதி தேர்வு செய்தார் தெரியுமா? சேப்பாக்கம் தொகுதியை. அந்த தொகுதியின் கடந்த கால நிலை என்ன?

1977 ரகுமான்கான் திமுக
1980 ரகுமான்கான் திமுக
1984 ரகுமான்கான் திமுக
1989 எம். அப்துல் லத்தீப் (திமுக சின்னத்தில்)
1991 ஜீனத் சர்புதின் (காங்கிரஸ்)

இப்படி முஸ்லிம்கள் தொடர்ந்து வெற்றிபெற்ற தொகுதியில் 1996, தொடங்கி 2001-&2006 என்று நின்று வென்று வருகிறார். உதாரணமாகத்தான் சென்னையில் உள்ள இரண்டு தொகுதிகளைக் காட்டியுள்ளோம். இன்னும் ஆய்வு செய்தால் அதிர்ச்சி தரும் பட்டியல்கள் வெளிவரலாம்.

‘‘அதிகாரம் செலுத்தும் இடத்தில் இல்லாத சமுதாயம் அடிமைகளாகத் தான் வாழ்வார்கள்’’- என்ற டாக்டர் அம்பேத்கரின் வார்த்தைகள் இங்கு நினைவுகூரத் தக்கன.

அடிமை இந்தியாவில் அரசியல் பிரதிநிதித் துவம் பெற்று சுதந்திர இந்தியாவில் தொலைத்துவிட்ட சமுதாயம் தான் முஸ்லிம் சமுதாயம்.

முஸ்லிம் பிரமுகர்களுக்கு திமுகவில் நேர்ந்த அவலங்கள்

அதிமுகவினால் தொடர் தோல்விகளை திமுக சந்தித்த நாட்களில் வெற்றி எம்.எல்.ஏ.வாக உலாவந்த ரகுமான்கானை அவர் தொடர்ந்து வென்ற சேப்பாக்கத்தை வழங்காமல் 2006ல் பூங்காநகரை அவருக்கு ஒதுக்கி உட்கட்சிப் பூசல்களால் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலங்களில் ரகுமான்கான், திமுகவை நியாயப்படுத்திப் பேசி மெஜாரிட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தனது உரை வீச்சால் வென்றார். சட்டமன்ற கதாநாயகன் என்ற பெயரால் அழைக்கப்பட்டவரின் இன்றைய நிலை என்ன-?

நேருவின் மச்சான் என்பதால் நாடாளுமன்றத் தொகுதி வழங்கி அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நெப்போலியனின் தியாகத்தை (?) விட ரகுமான்கான் தியாகம் சாதாரணமானதாக ஆகிவிட்டதா? காரணம் அவர் ஒரு முஸ்லிம்.
முஸ்லிம் லீக்கின் தனித்தன்மையை ஒழித்தது

1962ல் காமராஜ் காலத்தில் உள்ளாட்சிகளுக்கு நடந்த தேர்தலில் திமுக முதலிடத்தைப் பெற்றது. காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும் முஸ்லிம் லீக் மூன்றாவது இடத்திலும் வெற்றி பெற்றது. இன்று என்ன நிலை-? நகரங்களில் கணிசமாக வாழும் முஸ்லிம்களுக்கு உள்ளாட்சி மன்றங்களில் பரிதாபத்துக்குரிய நிலை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் முஸ்லிம்கள் மேயர்களாகவும், துணை மேயர்களாகவும், நகராட்சி& பேரூராட்சி சேர்மன்களாகவும் பதவி வகித்த முஸ்லிம்களுக்கு திமுக வழங்கியது துரோகமும், ஏமாற்றுமும் தான்.

சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் முஸ்லிம் லீக் தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும்போது கட்சியின் பதிவு, சட்டமன்றக் கட்சி தலைவர், கொறடா, தனி அலுவலகம், கவன ஈர்ப்பு தீர்மானம் மற்றும் கேள்வி கேட்கும் உரிமை என பல உரிமைகளைப் பெற முடியும். அதனை ஒழித்து தனது அடிமைகளாக, சிறுபான்மைப் பிரிவாக மாற்றிடும் கெட்ட எண்ணத்தில் உதயசூரியனில் நிற்கும் நிலையை உருவாக்கி தனித்தன்மையை ஒழித்தவர் கலைஞர் தான்.

முஸ்லிம் லீக் பல துண்டுகளாக உடைந்தது

1977 சட்டமன்றத் தேர்தல் தவிர்த்து 1978 தொடங்கி 1988வரை தோல்வியைப் பற்றி கவலைபடாமல் தன்னுடனே கிடந்த முஸ்லிம் லீக் 1989 தேர்தலில் ஆ.க.அ. அப்துஸ் ஸமது மற்றும் அ. அப்துல் லத்தீப் என்று உடைக்கப்பட்டது. முஸ்லிம் லீக்கிலிருந்து வெளியேறிய லத்தீபின் தேசிய லீக் கட்சிக்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்கி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தார் கலைஞர். அப்போது தொடங்கி லத்திப் சாகிப் திமுக சிறுபான்மைப் பிரிவாகவே அவருடனேயே இருந்தார். அவர் எப்போது வெளியேறினார் தெரியுமா?

1999 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்த நேரத்தில் மனம் வெதும்பிய நிலையில் லத்திப் சாகிப் சொன்னார்: ‘‘பச்சிளம் பிறைக்கொடியை தூக்கிக் கொண்டிருந்த என்னை, கூட்டணி தர்மம் என்று திமுகவின் கருப்பு, சிகப்பு கொடியைத் தூக்க சொன்னீர்கள் தூக்கினேன். இப்போது பாபர் மஸ்ஜிதை இடித்த காவிக் கொடியையும் தூக்கச் சொன்னால் நியாயமா கலைஞரே?’’ என்று கேட்டுவிட்டு வெளியேறினார் லத்தீப். அப்பொழுது லத்தீப் சாகிப்பின் தேசிய லீக்கை உடைத்து தமிழ் மாநில தேசிய லீக் என்ற பெயரில் திருப்பூர் அல்தாப்பை உடன் வைத்துக் கொண்டார். பிஜேபி கொடியோடு முஸ்லிம்களின் பச்சைக் கொடியை பறக்கவிட்ட பெருமைக்குரியவர் கலைஞர்(!)

கலைஞர் பிஜேபியோடு கூட்டணி வைக்க என்னவெல்லாம் சொன்னார். எந்த பிஜேபியை, ‘ஆக்டோபஸ்’ ‘பண்டார பரதேசிகள்’ என்றாரோ? அவர்களோடு தேர்தல் கூட்டணி வைத்துக் கொண்டு ‘‘கலைஞர் இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது என்று சி. சுப்ரமணியம் சொன்னார்’’ என்றார். ‘‘எதற்காக பிஜேபியோடு கூட்டணி வைத்தோம் என்றால் மதவாதத்தை விட ஊழல் கொடியது’’ என்று ஊழல் கறைபடியாத உத்தமர்(!) மதவெறியை நியாயப்படுத்தினார். கலைஞர் பிஜேபியோடு கூட்டணியில் இருக்கும்போது தான் குஜராத்தில் 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். இதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது ‘‘அது வேறு மாநிலப் பிரச்சினை’’ என்றார்.

தொகுதிகளை கொடுத்து பறிக்கும் கருணாநிதி

2006ல் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தலில் லீக்கிற்கு ஒரு தொகுதிக்கு மேல் கொடுக்க முடியாது என்ற நிலையில் தமுமுகவின் தலைவர்கள் கலைஞரிடம் பேசிய பிறகு மூனு சன்னு என்று எதுகை மோனையுடன் கூறி மூன்று தொகுதியும் உதயசூரியன் சின்னம் என்று அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளிவந்த சில நாட்களில் பாளையங்கோட்டை தொகுதியை பறித்து டி.பி.எம் மைதீன் கான் வசம் ஒப்படைத்தார் கலைஞர்.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது முஸ்லிம் பற்றி லீக்கின் மாநிலப் பொதுக்குழுவில் அதன் தலைவர் பேரா.காதர் மொய்தீன் வேட்பாளராகவும், ஏணி சின்னத்தில் போட்டியிடுவது என்றும் முடிவு செய்ய, அவை செய்தித்தாள்களிலும் வந்தது.

இந்நிலையில் இரண்டே நாட்களில் பேரா.காதர் மொய்தீனை அழைத்து மிரட்டிய கலைஞரும், துரைமுருகனும் வேட்பாளர் காதர்மொய்தீன் இல்லை, துரை முருகனின் தொழில் நண்பர் துபாய் அப்துல் ரகுமான், என்றும், உதயசூரியன் சின்னத்தில் தான் நிற்பார், ஏணி சின்னம் அங்கு போணி ஆகாது என்று கூறி அவமானப்படுத்தினார். கூனிக் குறுகி கருணாநிதி சொன்னதை ஏற்றுக் கொள்வதை தவிர வேறுவழியில்லை காதர்மொய்தீன் அவர்களுக்கு. ஏனென்றால், எதிர்த்தால் துபாய் அப்துல் ரகுமான் தலைமையில் ஒரு புதிய லீக் உதயமாகிவிடும் என்ற அச்சம்தான்.

வரும் 2011 சட்டமன்ற தேர்தலில், தொகுதிகள் பெறுவது பற்றி விவாதிப்பதற்காக நாகூரில் கூடியது முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு. இதில் மூன்று தொகுதிகளை பெறுவது என்றும் தனி சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் எப்போதும் போல தனது சிறுபான்மை பிரிவான லீக்கை மீண்டும், மூன்று தொகுதிகளுக்கும் உதயசூரியன் சின்னத்திற்கும் பணிய வைத்தது.

இச்சூழ்நிலையில் காங்கிரஸுக்கும், திமுகவுக் கும் ஏற்பட்ட தொகுதி பங்கீடு பிரச்சனையில் கொடுக்கப்பட்ட மூன்று தொகுதிகளில் ஒன்றை பிடுங்கி காங்கிரஸுக்கு கொடுத்துவிட்டது.

அதனை எதிர்த்து மாநில மகளிர் அணி தலைவியும், அப்துல் ஸமது சாகிப் அவர்களின் மகளுமான பாத்திமா முஸபர் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். கடுமையாக திமுகவை விமர்சித்தும், லீக் தலைவரை மாற்ற வேண்டும் என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியுள்ளார். கலைஞரின் முஸ்லிம் விரோதப் போக்கு பல தரப்புகளில் இருந்தும் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.

இந்நிலையில் எப்போதும் முஸ்லிம் லீக்கை பிரித்தும், உடைத்துமே வரலாறு படைத்த கலைஞர் முதல்முறையாக முஸ்லிம் லீகில் திருப்பூர் அல்தாப்பை அவரே தலைவர், அவரே தொண்டராய் உள்ள கட்சியான தமிழ்மாநில தேசிய லீக்கை அண்ணா அறிவாலயத்தில் வைத்து இணைப்பு விழா நடத்தினார். இது சமுதாயத்திலும், அரசியல் அரங்கிலும், பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஆனால் பிறகு தான் தெரிந்தது இதில் இருக்கும் வஞ்சகம் நிறைந்த சூழ்ச்சி.

1999ல் பி.ஜே.பியோடு கலைஞர் கூட்டணி வைத்தபோது லத்தீப் சாகிப்பிடம் இருந்து வெளியேறி தமிழ்மாநில தேசிய லீக் தொடங்கி திமுக, பி.ஜே.பி கூட்டணியில் இடம் பெற்று முஸ்லிம் சமுதாயத்திற்கு அல்தாப் செய்த துரோகத்திற்கு எந்த நன்றிக் கடனும் செலுத்தாமல், 2001&2006, இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் ஏமாற்றி வந்தார். இம்முறை எப்படியேனும் ஒரு தொகுதியை திமுகவில் தருவது என்றும், திருப்பூர் அல்தாப்பை தன்னோடு திமுகவில் இணைத்துக் கொள்வது என்றும் முடிவாகியிருந்தது.

முஸ்லிம் லீக்கிற்கு மூன்று தொகுதியை, கொடுத்து ஒன்றை பறித்த அதிருப்தியையும் சரிகட்ட மிகச்சிறந்த ராஜதந்திர சூழ்ச்சி செய்தார் கலைஞர். அது ஒரு கல்லில் இரண்டு மாங்காய். ஒன்று அல்தாப்புக்கான நன்றி கடன் தொகுதி தருவது. இன்னொன்று முஸ்லிம்களிடம் நிலவும் தொகுதி பறிப்பு அதிருப்தியை சரி செய்வது. இதற்கான முடிவுதான் முஸ்லிம்லீக்கில், தமிழ் மாநில தேசிய லீக்கை இணைத்து, பறித்த தொகுதியைத் திருப்பி கொடுப்பது போல் அந்தத் தொகுதியை திருப்பூர் அல்தாப்புக்கு கொடுக்க வைத்தது.

ஒரு நேரத்தில் ராஜாஜி பற்றி அறிஞர் அண்ணா சொன்னார். உடம்பெல்லாம் மூளை, மூளையெல்லாம் சிந்தனை, சிந்தனை யெல்லாம் வஞ்சனை என்று. இது ராஜாஜிக்கு பொருந்தியதோ இல்லையோ கலைஞருக்கு அப்படியே பொருந்தும் வாசகம்.

கலைஞர் முஸ்லிம்களுக்கு செய்த சாதனைகள்(!)

உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்த்தேன் என்பார். ஒட்டுமொத்த சமுதாயமும் பின்தங்கி இருக்கும் நிலையில், இந்த சமூக நீதி காவலன்(!) உருதுபேசும் முஸ்லிம்களை மட்டுமே சேர்த்தது முஸ்லிம்களுக்குள் பிரித்தாளும் சூழ்ச்சி என்பதை உணர்ந்து அப்போதே முஸ்லிம் லீக் பொதுக்குழுவில் கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீடு கொடுத்தார். அதற்காக தமுமுக நன்றி அறிவிப்பு மாநாட்டை நடத்தியது. அம்மாநாட்டில் கலந்து கொண்ட கலைஞர் இது என்னுடைய ஆழ்மனதில் உள்ள உணர்வு. எங்களு டைய தலைவர்கள் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் காட்டிய சமூக நீதி பாதை என்றெல்லாம் சொன்னார்.

அது உண்மையாக இருந்திருக்கு மேயானால் 1969ல் ஆட்சிக்கு வந்தபோதே கொடுத்திருக்க வேண்டும். 1971ல் இரண்டாவது முறையாக வந்தாரே அப்போது கொடுத்திருக்க வேண்டும். 1989ல் மூன்றாவதாக பதவியேற்றாரே அப்போதாவது கொடுத்திருக்க வேண்டும். 1996ல் நான்காவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றாரே அப்போதாவது கொடுத்திருக்க வேண்டும். 2006ல் ஐந்தாவதாக முதல்வர் பொறுப்பேற்று 2007ல் ஏன் கொடுத்தார். அது இந்த சமுதாயத்தை கீழ் நிலையிலிருந்து கைதூக்கி விடவேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல; தன்னையே நம்பிக் கிடக்கும் முஸ்லிம்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலும் அல்ல.

தமுமுகவின் 12 ஆண்டு போராட்டதைத் தொடர்ந்து கிடைத் ததே முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு.

2006ல் வாக்குறுதி கொடுத்து ஆட்சிப் பொறுப்பேற்று காலம் கடத்தி யதைப் பொறுக்காமல் ‘‘வீறுகொண்டு எழுவோம்...’’ என்ற தமுமுக பாபநாசம் பொதுக்குழுவின் எச்சரிக்கைதான் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்க வழிவகுத்து அதிலும் பல்வேறு குளறுபடிகள். முஸ்லிம்களுக்கான இடங்கள் சரியான முறையில் நிரப்பப் படுவதில்லை என்பதை எடுத்துச் சொல்லி வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று கேட்டும் இதுவரை எந்த பதிலும் இல்லை.

இதனைத் தவிர என்ன செய்தார் கலைஞர் சாதனையாகச் சொல்ல. முஸ்லிம் சமுதாயத்திற்கு எவ்வளவு செய்தாலும் கலைஞருக்காக இந்த சமுதாயம் இழந்ததை வைத்துப் பார்த்தால், இமயமலைக்கும், கூழாங் கல்லுக்கும் உள்ள வித்தியாசம் இருக்குமே அல்லாமல் சமன் செய்ய முடியாது.

திமுக உள்கட்டமைப்பில் முஸ்லிம்கள்

தனது தாய்ச் சபையைத் துறந்து, தனது அடையாளத்தை இழந்து கலைஞரின் தலைமையேற்ற முஸ்லிம் சமுதாயத்தின் நிலை இன்று திமுகவின் நிர்வாகப் பொறுப்புகளில் எப்படி உள்ளது.

தலைமை நிர்வாகக் குழு மற்றும் உயர்மட்ட செயல்திட்டக் குழுவில் ஒரு முஸ்லிம் உண்டா? பெயருக்கேற்றார் போல வாழ்ந்து மறைந்த சாதிக் பாட்ஷா, மாநிலப் பொருளாளராக இருந்து மறைந்த பிறகு இதுவரை ஒருவரும் தலைமை நிர்வாகக் குழுவில் பொறுப்புக்கு வர முடியவில்லை.

அடுத்த அதிகாரம் பொருந்திய பதவியாக இன்று குறுநில மன்னர் களைப் போன்று அதிகாரம் செலுத்தும் மாவட்டச் செயலாளர்கள் பொறுப் புகளில் ஒரு முஸ்லிமும் இல்லையே ஏன்?

நீலகிரி முன்னாள் மாவட்டச் செயலாளர் பா.மு. முபாரக் இப்பொழுது எங்கே இருக்கிறார்?

வேலூர் முன்னாள் மாவட்டச் செயலாளர் முகம்மது ஷகிக்கு கட்சியில் என்ன மரியாதை-?

ஆயிரம் விளக்கு உசேன், துறைமுகம் காஜா போன்றவர்கள் திமுகவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

ஏன் ஒன்றியச் செயலாளர் பொறுப்புகளுக்கு கூட முஸ்லிம்கள் நியமிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்தப் படுகின்றார்கள். கலைஞரின் வாக்கு வங்கியாக மட்டும் வாழும் அடிமைகளா முஸ்லிம்கள்?

தமுமுகவை அடக்குமுறையால் ஒழித்துவிட நினைத்தது யார்?

முஸ்லிம் சமுதாயத்தின் உரிமை களைப் பாதுகாக்க ஜனநாயக ரீதியான அமைப்பாக ஒன்றுதிரள்வோம் என்ற முடிவை எடுத்து தமுமுகவை 1995ல் துவங்கினோம்.

1996ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கலைஞர் முதல்வராகப் பதவி ஏற்றார். டிசம்பர் 06 போராட்டம் என்றாலே காவல்துறை மூலம் அடக்குமுறைகள் ஏவிவிடப்பட்டன. கவர்னர் மாளிகை மசூதியில் ஜும்மா தொழுகைப் போராட்டம் என்று அறிவித்தோம். இது ஓரு ஜனநாயக போராட்டம். ஆனால் கலைஞரோ சட்டமன்றத்தில், ‘‘மத தீவிரவாதிகள் கவர்னர் மாளிகையில் நுழைவதாக அறிவித்திருக்கின்றனர். காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்’’ என்று கூறி, தீவிரவாதிகள் என்று பட்டம் வழங்கி முஸ்லிம்களை மிரட்டியதோடு நாடு முழுவதும் கைதுப் படலும் நடந்தன. நாடு முழுவதும் அப்பாவி முஸ்லிம்களின் வீடுகளில் காவல்துறை புகுந்து படுக்கை அறை வரை சென்று கைது செய்து சிறைவைத்த கொடூரங்கள் நடந்தன. அதையும் மீறி ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டு நந்தனம் கல்லூரி வளாகத்தில் சிறை வைக்கப்பட்டோம்.

1997 டிசம்பர் 6ல் சென்னையில் இடஒதுக்கீடு மற்றும் பாபரி மஸ்ஜித் பிரச்சனையை முன்வைத்து பேரணி மாநாடு என்று தமுமுக அறிவித்தது. கடற்கரை சீரணி அரங்கில் மாநாடு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கோவையில் செல்வராஜ் என்ற காவலர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பேரணி மாநாட்டிற்கு திமுக அரசு, தடை விதித்தது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கைது செய்யப் பட்டனர். இதனையும் மீறி கொட்டும் மழையில் மக்கள் திரண்டனர். அனைவரையும் கைது செய்ய முடியாத சூழல் உருவாகியது.

1998 டிசம்பர் 6ல் மதுரையில் இடஒதுக்கீடு மற்றும் பாபரி மஸ்ஜித் தொடர்பான பேரணி மற்றும் மாநாடு என்று தமுமுக அறிவித்தது. இம்மாநாடு நடைபெறுவதற்கு 15 தினங்கள் முன்பாகவே தமுமுக நிர்வாகிகளும் அப்பாவி முஸ்லிம்களும் கைது செய்யப்பட்டனர். மாநாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து முதல்வர் கலைஞர் வீடு முற்றுகை என்று அறிவித்தோம். மீண்டும் அடக்குமுறை, அரச பயங்கரவாதம் தூண்டி விடப்பட்டது.

டிசம்பர் 6 என்றாலே அனுமதி மறுக்கப்படுகிறது என்பதால் 1999 ஜூலை 4ல் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டை சென்னை கடற்கரை சீரணி அரங்கில் நடத்தப் போவதாக தமுமுக அறிவித்தது. அதனைத் தடுத்திட மே மாதம் கடைசி வாரத்தில் சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட காவல்துறை ஆணையாளர் அலுவலகங்கள் அருகில் வெடிக்காத குண்டுகள் வைக்கப்பட்டதாகச் சொல்லி மாநாட்டுப் பணிகளில் இருந்த தமுமுகவினரை பல்லாயிரணக்கணக்கில் கைது செய்து சிறை வைத்தார் கலைஞர்.

அதன்பிறகே கருணாநிதியின் தொடர் அடக்குமுறையை எதிர்கொள்ள எதிர்க்கட்சி தலைவர் செல்வி ஜெயலலிதாவை மாநாட்டிற்கு அழைப்பது என்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டது. பேரெழுச்சியோடு முஸ்லிம்கள் பங்குகொண்ட வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மாநாடாக அமைந்தது. அதன்பிறகே கலைஞர் அரசின் அடக்குமுறை முடிவுக்கு வந்தது.

நாம் கேட்பது என்னவென்றால், இந்த நாட்டில் அநீதி இழைக்கப்பட்ட சமுதாயம் நீதி வழங்கக் கோரி அமைப்பு நடத்துவதை இயக்கத்தின் மூலம் ஒன்று திரள்வதை ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக தன்னை சொல்லிக் கொள்ளும் கலைஞர் ஏன் ஏற்றுக் கொள்ள மறுத்தார்.

ஏன் அரசின் கொடுங்கரங்களால் ஏவி ஒழித்திட துடித்தார் என்றால் தனது நிரந்தர வாக்கு வங்கிக்கு ஆபத்து வந்து விடும் என்பதால்தான். இவர் தான் முஸ்லிம்களின் காவலரா?

கோவை கலவரம்: திமுக அரசு முஸ்லிம்களுக்கு செய்த துரோகம்

கோவையில் 19 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படவும், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் அழிக்கப்படவும், காவல்துறையின் கருப்பு ஆடுகளுக்கும் பாசிச சங்பரிவார் கூட்டணிக்கும் கலைஞர் அரசு தந்த ஆதரவுப் போக்கே காரணம் என்பதை அனைவரும் அறிவோம். கோவையில் 19 முஸ்லிம்களின் அநியாயப் படுகொலைகளுக்கு கலைஞர் அரசே முழுக்க முழுக்க காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் சொந்தப் பகையை தீர்க்க ஒரு வன்முறைக் கும்பல் ஒரு காவல்துறை அதிகாரியை அமைச்சர்களுக்கு கண் எதிரிலேயே கொடூரமாகக் கொன்று தீர்த்தது. அது மிகப்பெரிய கொடூர நிகழ்வாக இருந்தும் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிக்காக ஒட்டுமொத்த காவல்துறையே கொலை செய்த குடும்பத்தைச் சேர்ந்த சமுதாயத்தை பழிதீர்க்கப் புறப்படவில்லை. ஆனால் 1997 நவம்பரில் கோவையில் காவலர் செல்வராஜ் ஒரு கும்பலால் கொல்லப்படுகிறார். கொலையாளிகள் எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என திட்டமிட்டு வேட்டையாடியது கலைஞரின் காவல்துறை. ஒரே நாளில் ஒரு படுகொலை நிகழ்வை மட்டும் காரணம் காட்டி ஒட்டுமொத்த சமுதாயமே கோவையில் வேட்டையாடப்பட்டது திடீரென்று நிகழ்ந்த ஒன்றாகக் கருதிட முடியாது.

1997 நவம்பரில் நிகழ்ந்த படுகொலைகள் மற்றும் முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டது குறித்து திட்டமிடல்கள் குறித்து உளவுத்துறையை தம் கையில் வைத்திருக்கும் கலைஞருக்கு தெரிந்தே இருக்க வேண்டும். இருந்தும் அவர் முஸ்லிம்களைப் பாதுகாக்கத் தவறினார். இது கோவை விவகாரத்தில் அவர் செய்த முதல் குற்றம்.

குதறப்பட்ட மக்களின் கதறல்களை அவர் பொருட்படுத்தவில்லை. ஆறுதல் கூறக்கூட அவர் செல்லவில்லை. ஆனால் அதே காலகட்டத்தில் அருகிலுள்ள கோபிச்செட்டிபாளையத்துக்கு கலைஞர் சென்றார். அந்தப் பகுதியில் மர்ம நோயால் மரணமடைந்த ஆடுகளை பார்வையிடச் சென்றார். ஆடுகளுக்கு காட்டிய கருணையை, ஆறுதல்களைக் கூட கோவையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கவில்லை. அது மட்டுமின்றி கோவை படுகொலைக்காக இதுவரை பகிரங்க வருத்தமோ மன்னிப்போ கேட்காதவர் தான் கலைஞர்.

ஏறக்குறைய 200 பேரை கோவையில் 1998 பிப்ரவரியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் தொடர்புபடுத்தி சிறைக்கொட்டடியில் தள்ளி கொடுமைகள் புரிய காரணமானார். ஆனால் 1997 நவம்பர் படுகொலைகளுக்கு காரணமாக கொலையாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படவில்லை. கோவையில் முஸ்லிம்களை கருவறுக்க முழு பங்கு வகித்த காவல்துறை அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்காததோடு அவர்களுக்குப் பதவி உயர்வுகளை வழங்கி, நீதியை ஏளனம் செய்தார் கலைஞர்.

கூட்டணியில் இருந்து கொண்டே நாம் பெரும் போராட்டங்களை நடத்தி சிறைவாசிகளை விடுவித்தோம்.

பாளையங்கோட்டை அப்துல் ரஷீத் கொலை வழக்கும், கலைஞரின் மாற்றாந்தாய் மனப்பான்மையும்....

பாளையங்கோட்டையில் 1999ம் ஆண்டு நிகழ்ந்த தப்லீக் ஊழியர் அப்துல் ரஷீத் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்வதில் அலட்சியம் காட்டிய கலைஞரின் காவல்துறை, அப்துல் ரஷீதின் மகனையே கைது செய்து சிறையில் அடைத்தது.

அப்துல் ரஷீத் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும், அப்பாவியான அவர் மகனை விடுவிக்கக் கோரியும், அப்துல் ரஷீத் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரியும் தொடர்ச்சியான போராட்டங்களை தமுமுக நடத்தியது-. தொடர் அழுத்தங்களுக்குப் பிறகு இழப்பீடு பெற்றுத்தர முடிந்ததே தவிர இன்றும்கூட உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

ம.ம.க.வினரை நோக்கி கொலைவெறி கூட்டத்தை ஏவிய திமுக

கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் திமுகவினர் செய்த அராஜகங்களையும் கள்ள ஓட்டுபோட்ட இழிசெயலையும் தட்டிகேட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் திமுக கொலைவெறி கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். கடுமையான ரத்தக் காயங்க ளோடு பொறுமை காத்த நம் மீது அடக்கு முறையும் அராஜக தாக்குதலையும் ஏவியது கலைஞர் அரசு.

காதியானிகளை ஆதரிக்கும் கலைஞரின் காவல்துறை

காதியானிகள் முஸ்லிம்கள் இல்லை என்பது ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் கருத்து. ஆனால் காதியானிகளை விமர்சித்து ஜும்ஆவில் பேசினார்கள் என்பதற் காக மேலப்பாளையத்தைச் சேர்ந்த உலமாக்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை அலைக்கழித்தது கலைஞரின் காவல்துறை. இதுமட்டுமின்றி அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒன்றுசேர்ந்து மேலப்பாளையத்தில் கடந்த மார்ச் 13 அன்று காதியானிகளின் பொய் முகத்தை கிழிக்க நடத்திய மாநாட்டிற்கு பல்வேறு வகையில் நெருக்கடிகளைத் தந்ததும் கலைஞர் காவல்துறை தான்.

திருமணப் பதிவுச் சட்டத்தில் துரோகம்

திமுக அரசு கடந்த 2009ம் ஆண்டு கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தை நிறைவேற்றியது. இந்த திருமணப் பதிவுச் சட்டத்தில் உள்ள விதிமுறைகள் முஸ்லிம் தனியார் சட்டம் தந்துள்ள உரிமைகளுக்கு முரணாக அமைந்துள்ளது என்று கூறி ஜமாஅத்துல் உலமா தலைமையில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் கட்சிகளும் அரசிடம் முறையிட்டன. மார்ச் 6, 2010ல் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் இச்சட்டத்தில் உள்ள குளறுபடிகளை சுட்டிக்காட்டி எத்தகைய திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதும் சுட்டிக் காட்டப்பட்டது. திருத்தத்தை உடனடியாக செய்வதாக சட்ட அமைச்சர் அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளிடமும் ஒப்புக் கொண்டார். ஆனால் பெயரளவிற்கு ஒரு அரசாணை வெளியிடப்பட்டு முஸ்லிம் அமைப்புகளிடம் அளிக்கப்பட்ட வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டது. இதே நேரத்தில் இந்து கோயில்களில் நடைபெறும் திருமணம் அப்படியே பதிவு செய்யப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. காலங்காலமாக முஸ்லிம்களின் திருமணங்கள் ஜமாஅத்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. அதனை அப்படியே ஏற்றுக் கொண்டு பதிவு செய்ய வேண்டுமென்ற முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இதேபோன்ற வாதங்களை அதிமுகவை நோக்கியும் வைக்க முடியும் என்ற சிந்தனை பலருக்கு இருக்கலாம். ஆனால் அதிமுகவைப் பொறுத்தவரை அதன் தலைமை செய்தது முழுக்க முழுக்க சரியன்றோ, அவர்கள் தவறே செய்யாதவர்கள் என்றோ நாம் சொல்லவில்லை.

அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய் வழக்குப் போட்ட காவல் அதிகாரிக்கு பொறுப்பு

திமுக ஆட்சிக்கு வந்த சில நாட்களில் ‘கோவையை குண்டு வைத்துத் தாக்க மீண்டும் முஸ்லிம் தீவிரவாதிகள் சதி’ என்ற பெயரில் ஒரு கற்பனைக் கதையை கட்டவிழ்த்து விட்டார் உதவி ஆணையாளராக இருந்த ரத்தினசபாபதி. தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை இச்செய்தி ஏற்படுத்தியது. ஹாருன் பாஷா என்ற இளைஞரும் அவரது உறவினர்களும் இந்த பொய் வழக்கில் கைதுச் செய்யப்பட்டார்கள். இந்த அக்கிரமதை அரசின் கவனத்திற்கு தமுமுக கொண்டு சென்றது. இதன் விளைவாக இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி, இது கற்பனையாக புனையப்பட்ட வழக்கு என்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதன் விளைவாக ஹாரூன் பாஷாவும் அவரது நண்பர்களும் விடுதலை செய்யப்பட்டனர். ரத்தினசபாபதியை நீதிபதி கடுமையாக கண்டித்தார். இத்தகைய முஸ்லிம் விரோதப் போக்குடைய அதிகாரிக்கு தனது ஆட்சியின் அந்திம காலத்தில் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் பொறுப்பைக் கொடுத்து கவுரவித்துள்ளார் கலைஞர். அரசுப் பணிக்கு ஆட்களை எடுக்கும் இந்த ஆணையத்தில் இவரைப் போன்றவர்கள் இருந்தால் முஸ்லிம் இளைஞர்களுக்கு நியாயமாக நேர்மையாக வாய்ப்பு கிடைக்குமா?

திமுக மட்டுமே முஸ்லிம்களின் செல்வாக்கு மிகுந்த கட்சி என்றொரு மாயையை திமுக விதைத்து வந்தது. இதைப் போர்வையாக வைத்துக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான துரோகங்களும் தொடர்ந்தது. அதனை அம்பலப்படுத்தி மக்களை விழிப் படைய வைக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு.

அதிமுகவின் தவறுகள் பூதாகரமாக் கப்படுவதும், திமுகவின் தவறுகள் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கும் அளவு சிறியதாக்கப்படுவதும் சமுதா யத்தின் உண்மையான நிலையான அரசியல் எழுச்சிக்கு உகந்ததாக இருக்க முடியாது.

-ப.அப்துல் சமது

கலைஞரின் முஸ்லிம் விரோதப் போக்கு: ஒரு துரோக வரலாறு Part-01

கலைஞரின் முஸ்லிம் விரோதப் போக்கு: ஒரு துரோக வரலாறு Part-01 Tuesday, 15 March 2011 21:11 . 1947-ஆம் ஆண்டு, ஆகஸ்டு 15, இந்தியா விடுதலை பெற்றதும், பிரிவினையின் மூலம் பாகிஸ்தான் என்கிற நாடு உருவானது.அதனைத் தொடர்ந்து இந்திய முஸ்லிம்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. பிரிவினைக்கு காரணமான சங்பரிவார பாசிச சக்திகளின் சதி திட்டங்களை மறைத்து, முஸ்லிம்களே காரணம் என்றும் முஸ்லிம்களின் அரசியல் கட்சியான “முஸ்லிம் லீக்” தான் காரணம் என்றும் நாடு முழுவதும் முஸ்லிம் லீக்கை துடைத்தெறிய அப்போதைய பாசிச சிந்தனை ஆட்சியாளர்களின் அச்சுறுத்தலால் முஸ்லிம்களின் அரசியல் சக்தி சிதைக்கப்பட்டது. லீக்கின் தலைவர்கள் கட்சியை கலைத்து விட்டு காங்கிரஸில் இணைந்தனர். வட மாநிலங்களில் பல முக்கியத் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று விட்டனர். இதுபோன்ற கடுமையான நெருக்கடி மிகுந்த சூழலில் “முஸ்லிம் லீக்” என்ற இயக்கத்திலிருந்து யார் சென்றாலும் நான் ஒருவன் மட்டுமே மிஞ்சியிருந்தாலும் தனி நபராக வேனும் கட்சியை நடத்துவேன், என்று கூறி இந்திய முஸ்லிம்களின் உரிமைகளுக்காக தனது வாழ்நாளெல்லாம் தொடர்ந்து போராடிய கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களை இவ்வேளையில் நினைவு கூர்வதும், நன்றி செலுத்துவதும், அவர்களது மறுமை வாழ்க்கை பெருமகிழ்ச்சி கொண்டதாக அமைந்திட சர்வ வல்லமை பொருந்திய அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதும் இந்திய முஸ்லிம்கள் குறிப்பாக தமிழக முஸ்லிம்கள் மீது கடமையாகும். விடுதலை அடைந்த இந்தியாவில் மூன்று அரசியல் கட்சிகள் மட்டுமே இருந்தன. 1) இந்திய தேசிய காங்கிரஸ், 2) இந்திய யூனியன் முஸ்லிம் லீக், 3) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இன்று தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டக் கட்சிகள் மட்டுமே 1400-ஐ தாண்டியுள்ளது. இன்று தேர்தல் சின்னங்களாக இரட்டை இலை, உதய சூரியன், கை போன்றவை இருப்பது போன்று அப்போது “நிறங்கள்” சின்னமாக இருந்தன. காங்கிரஸ் சின்னம் ‘மஞ்சள்,’ முஸ்லிம் லீக் சின்னம் ‘பச்சை,’ கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் ‘சிகப்பு’ என்றிருந்தது. மஞ்சள் பெட்டி, பச்சை பெட்டி, சிகப்பு பெட்டிகள் வாக்குபதிவு மையத்தில் வைக்கப்படும். அதில்தான் மக்கள் வாக்களிப்பார்கள். அந்தளவுக்கு தனித்தன்மை வாய்ந்ததாக இந்திய முஸ்லிம்களின் அரசியல் இருந்தது. 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிவதற்கு முன்னால் தமிழ்நாடு, “சென்னை மாகாணம்” என்ற பெயரில் கேரளத்தின் மலபார், ஆந்திராவின் திருப்பதி - கடப்பா, கர்நாடகாவின் சில மாவட்டங்களைக் கொண்டிருந்தது. சென்னை மாகாணத்தில் 29 தொகுதிகள் முஸ்லிம் வாக்காளர்களுக்கான தனித் தொகுதி யாக இருந்தது. 1946&ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காயிதே மில்லத் தலைமையில் இந்த 29 தொகுதிகளையும் முஸ்லிம் லீக் கைப்பற்றியது. மேலும் 7 மேல் சபை (எம்.எல்.சி) உறுப்பினர்கள் இருந்தனர். காயிதே மில்லத் அவர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகக் தேர்வு செய்யப்பட்டார். 1952 வரை இந்நிலை தொடர்ந்தது. பிறகு அரசியல் நிர்ணய சபையில் அப்போதைய உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேலின் சதியால் முஸ்லிம்களின் அரசியல் அதிகார உரிமை பறிக்கப்பட்ட சோக வரலாறு நடந்தேறியது. இதுவே இன்றைய இந்திய முஸ்லிம்களின் அவல நிலைகள் அனைத்திற்கும் மூலக் காரணம். காங்கிரஸின் துரோகத்தையும், பச்சோந்தி தனங்களையும் சகித்துக் கொண்டு மாற்று அரசியல் சக்தியை எதிர்நோக்கியிருந்த காயிதே மில்லத் அவர்கள் தமிழகத்தில் அறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்க முடிவெடுத்தார். திமுகவை தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி காங்கிரஸின் துரோக ஆட்சியை வீழ்த்திட, ராஜாஜியோடு அண்ணாவை இணைத்து கூட்டணி அமைத்தவர் காயிதே மில்லத் அவர்கள். 1967ல் அமைந்த அந்த கூட்டணியில் முஸ்லிம்லீக் பெற்ற தொகுதிகள் நான்கு மட்டுமே. துரோகத்தை வீழ்த்திட எண்ணிக்கைப் பற்றி கவலைப்படாமல் நான்கு மட்டுமே பெற்று மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது முஸ்லிம்லீக். திமுக அமைச்சரவை பதவியேற்றது; அறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனார். ஆனால் இரண்டே ஆண்டுகளில், 1969-ல் அண்ணா மரணமடைய கலைஞர் மு. கருணாநிதி முதல்வர் பதவியையும், கட்சித் தலைவர் பதவியையும் ஏற்றார். இனி கலைஞரின் துரோக வரலாறு தொடங்குகிறது. முஸ்லிம் சமுதாயத்தை கலைஞரின் கரங்களில் ஒப்படைத்தாரா காயிதே மில்லத்! 1972, ஏப்ரல்- 5 அன்று இறைவனடி சேர்ந்தார் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் அவர் மரணிக்கும் தருவாயில் கலைஞர் அவர்கள் காயிதே மில்லத் அவர்களை சந்திக்கச் சென்ற போது கலைஞரின் இரண்டு கரத்தையும் பிடித்துக் கொண்டு “முஸ்லிம் சமுதாயத்திற்கு, எவ்வளவோ செய்திருக் கிறீர்கள் அதற்கெல்லாம் நன்றியை கூறி இந்த சமுதாயத்தை உங்கள் கைகளில் ஒப்படைத்து விட்டுச் செல்கிறேன்” என்றார் என்று 35 ஆண்டுகளாக பொது மேடைகளில் பேசி வருகிறார் கலைஞர். இது எந்த அளவுக்கு உண்மை. கடைசி காலகட்டங்களில் கலைஞரோடு காயிதே மில்லத் அவர்களின் உறவு எப்படி இருந்தது. ஒரு சில வரலாற்று உதாரணங்கள். 1971-ல் நடந்த தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடித்தது. முஸ்லிம் லீக் 8 தொகுதிகளை, பெற்று தராசு சின்னத்தில் போட்டியிட்டு 6 தொகுதி களில் வெற்றி பெற்றிருந்தது. 1971 ஆண்டின் நிதிநிலை அறிக்கை சமர்பித்த முதல்வர் கலைஞர் ஒரு அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட் டார். விடுதலைப் பெற்றதிலிருந்து ஓமந்தூர் இராமசாமி ரெட்டியின் ஆட்சி தொடங்கி அறிஞர் அண்ணா ஆட்சி வரை 24 ஆண்டுகாலமான மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்ட மாநிலமான தமிழ்நாடு முதன் முதலாக கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் தான் “சாராயக் கடைகள் திறக்கப்படும்” என்று அறிவிப்பு செய்யப்பட்டது. இதனை காயிதே மில்லத் கடுமையாக எதிர்த்தார். “எதிர்கால தமிழ்ச் சமுதாயம் சீரழிந்து விடும்; சாராயக் கடையை திறக் காதீர்கள்” என்று வேண்டினார். சட்டமன்றத்தில் அப்போதைய முஸ்லிம் லீக் கட்சித் தலைவராக இருந்த திருப்பூர் மொய்தீன் அவர்கள் தனது கட்சியின் எதிர்ப்பை சட்டமன்றத்தில் வலுவாகப் பதிவு செய்தார். காமராஜர், ராஜாஜி, மா.பொ.சி, கம்யூனிஸ்ட் கட்சிகளின், எதிர்ப்புகளை எல்லாம் மீறி சாராயக் கடையைத் திறந்தார் கலைஞர். காயிதே மில்லத் கோபமானார். சாராயக் கடையால் முஸ்லிம்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமும் பாதிக் குமே என்று தமிழ் மொழிக்காக அரசியல் நிர்ணய சபையில் குரல் கொடுத்த தலைவன் தமிழ்ச் சமுதாயத்திற்காக குரல் எழுப்பினார். கூட்டணிக் கட்சி என்று பாராமல் கண்டனக் குரல் எழுப்பினார். மாநில செயற்குழுவைக் கூட்டி தமிழகம் தழுவிய அளவில் கண்டன பொதுக் கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டார். காயிதே மில்லத் அவர்களும் பல கூட்டங்களில் பங்கு கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். தமிழர்களைப் பற்றி கவலைப்படாத தமிழினத் தலைவர் கலைஞர் “மதுவிலக்கு ரத்து விளக்க கூட்டங்கள் நடத்தி முஸ்லிம் லீக்கையும், காயிதே மில்லத்தையும் கடுமையாகச் சாடியது மட்டுமல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) பற்றிப் பேசியும், முஸ்லிம் நாடுகளை கொச்சைப்படுத்திப் பேசியும் சமுதாயத்தை இழிவுபடுத்தினார். அதே காலகட்டத்தில் இன்னொரு சம்பவம் நடைபெற்றது. தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு உறுப்பினர்கள் நியமிக்க காயிதே மில்லத்திடம் பரிந்துரை கேட்டிருந்தார். பல வலியுறுத்தலுக்குப் பிறகு தனது கட்சியினரின் பட்டியலைக் கொடுத்தார் காயிதே மில்லத். ஆனால், கலைஞர் முஸ்லிம் லீக்கின் ஒற்றுமையைக் குலைக்க சதி செய்தார். காயிதே மில்லத் கொடுத்த பட்டியலில் உள்ளவர்களுக்கு வக்ஃப் உறுப்பினர் பதவி தராமல், தனக்கு சாதகமான முஸ்லீக் லீக்கைச் சேர்ந்த இருவருக்கு பதவி கொடுத்தார் கலைஞர். சுயமரியாதைக்காகவும், தன்மானத்திற் காகவும் தனித் தன்மைக்காகவும் வாழ்ந்த அந்தத் தலைவன் உச்சக் கட்ட ரோஷம் கொண்டார். “கலைஞரே! கூட்டு சேர்ந்ததால் குறைத்து மதிப்பிட வேண்டாம். எதையும் அடமானம் வைத்ததாக எண்ண வேண்டாம்” என்று சுயமரியாதை முழக்கமிட்டார். என்னுடைய கட்சியில் யாருக்கு எந்த பொறுப்பு, பதவி கொடுக்க வேண்டும் என்பது எங்களது உரிமை. இதனை நீங்கள் முடிவு செய்ய முடியாது என்று கலைஞர் தந்த வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்ய வைத்தார் காயிதே மில்லத். இதனால் திமுக, முஸ்லிம் லீக் உறவு சீர்குலைந்தது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் துறைமுகம் பகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. இதற்கு முஸ்லிம்லீக் ஆதரவு இல்லையென்றால் திமுக தோற்பது உறுதி என்ற நிலையில் ஆளும்கட்சி இடைத்தேர்தலில் தோற்றால் திமுகவுக்கு சரிவு என்பதால் அப்போதைய அமைச்சர் என்.வி. நடராஜனை அனுப்பி சமாதானம் பேசினார் கலைஞர். வாக்குப் பதிவுக்கு ஒருநாள் உள்ள நிலையில் திமுகவுக்கு ஆதரவளித்தார் காயிதே மில்லத்; திமுக வெற்றியும் பெற்றது. இந்தக் கருணாநிதியிடம் முஸ்லிம் சமுதாயத்தை ஒப்படைத்திருப்பாரா காயிதே மில்லத்? இதுபற்றி அப்துல் ஸமத் அவர்களிடம் விசாரித்து அவருடைய 60 ஆண்டுகால உற்ற நண்பர் துபாஷ் சி.எஸ். தாஜூதீன் அவர்கள் அதனை தனது “சிராஜில் மில்லத் அப்துல் ஸமது” என்ற நூலில் கூறியுள்ளதைப் பாருங்கள். “சிராஜுல் மில்லத் (அப்துல்சமது) மரணத்திற்கு முன்னர் பீட்டர்ஸ் ரோடு அலுவலகத்துக்கு வந்திருந்தபோது, நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும். காயிதே மில்லத் மரணத்துக்கு முன்னர் நானும், விடிய விடிய அவர்களின் அருகிலேயே நின்று கொண்டிருந்தேன். அவர் மூடிய கண்களைத் திறக்கவில்லை. மூச்சு மட்டும் சீராக ஓடிக் கொண்டிருந்தது. அருகிலிருந்த டாக்டர் யு. முஹம்மத்தின் துணைவியார் திருமறையில் இருந்து வசனங்களை மெல்லிய குரலில் ஓதிக் கொண்டிருந்தார். காயிதே மில்லத் செவிகள் வேத வரிகளை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தன. கண்கள் பளிச்சென்று ஒருமுறை திறந்து மூடின. அந்த சமயம் திமுக தலைவர் கலைஞர் டாக்டர். மு. கருணாநிதி தம் பரிவாரங்களோடு, காயிதே மில்லத் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தார். ஒரு நிமிட நேரம் பரபரப்பு நிலவியது. அப்துல் ஸமது சாஹிப், காயிதே மில்லத் காதருகில் குனிந்து, கலைஞர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார் என்றார். கலைஞர் குனிந்து முகத்தருகே நின்று “அய்யா” என்றார், அல்லாஹ்வின் அழைப்பை எதிர்பார்த்திருந்த அந்த நேரத்தில் அவருடைய உதடுகள் கலிமாவை மொழிந் தன. இந்த சமுதாயத்தைத் தங்கள் கையில் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறேன் என்று தலைவர் அவர்கள் சொன்னதாகவும், சிலர் அவ்வாறு விளக்கம் அளித்ததாகவும் ஒரு செய்தி பரவியது. அது உண்மையா” என்று? கேட்ட போது அப்துல் ஸமது முகத்தில் பொருள் புரியாத புன்னகை ஒன்று தவழ்ந்தது. அதுதான் அவருடைய பதில். அரசியல் வாதியாகவும், ஆத்மீக ஞானியாகவும் விளங்கிய காயிதே மில்லத் அவர்கள் “சக்கராத்” நேரத்தில் இறைவனிடம்தான் இந்த சமுதாயத்தை ஒப்படைப்பதாக உள்ளத்தில் பிரார்த்திப்பார்களே தவிர, கலைஞரிடமா ஒப்படைப்பதாகச் சொல்லியிருப்பார்கள் என்று யாரும் சிந்தித்துப் பார்க்கவில்லை என்பது ஆச்சரியம் தான்” என்று எழுதி வைத்துள்ளார் துபாஷ். காயிதே மில்லத் மட்டுமல்ல சிராஜுல் மில்லத், அப்துல் ஸமத் ஸம்ஸிரே மில்லத் அப்துல் லத்தீப் உள்ளிட்ட தலைவர்கள் யாருமே கலைஞர் கருணாநிதி செயல்பாட்டால் அவருக்கு எதிர்நிலை எடுத்தும், கருத்து முரண்பட்ட நிலையிலேயே மரணமடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. காயிதே மில்லத் அவர்களின் மரண நேரத்தில் உடன் இருந்தவர் களில் வாக்குமூலம் இப்படியிருக்க, ஒரு உன்னத தலைவரின் மரணத்தில் கூட முஸ்லிம் சமுதாயத்தை ஏமாற்றி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைவது என்பது கலைஞரால் மட்டுமே முடியும். மேலும் காயிதே மில்லத் அவர்களுக்குப் பிறகு வந்த தலைவர்கள் உரிமைகளுக்காக போராடமல் வலிமையை இழந்தனர். வலிமை யை இழந்தனர். இதனைப் பயன்படுத்திய கலைஞரின் பேனா முனையும், அவருடைய நாவன்மையும், முஸ்லிம் சமுதாயத்தை வசீகரிக்கத் துவங்கியது. ‘சிறுவனாய் இருக்கும்போதே ஒரு கையில் “தாருல் இஸ்லாம்” பத்திரிக்கையும் இன்னொரு கையில் “குடியரசு பத்திரிக்கையும் விற்றவன் நான்” “முஸ்லிம்களுக்கு ஏதேனும் ஓர் ஆபத்து என்றுச் சொன்னால் அது எனது பிணத்தின் மீது தான் நடக்கும்” என்றார். மீலாது மேடைகளில் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் ஓங்கி முழங்கினார். முஸ்லிம்கள் மெய்மறந்தனர். முஸ்லிம்களின் இயக்கம் திமுகதான் என்றனர். முஸ்லிம்லீக் என்ற தனித்தன்மை வாய்ந்த பேரியக்கம் தனது ஆதரவு தளத்தை தொலைத்தது. தாயின் மடியில் இருக்கும் குழந்தை கிலுகிலுப்பை ஆட்டும் சத்தத்தின் மீது ஆசைப்பட்டு, கிலுகிலுப்பை ஆட்டுபவரிடம் சென்று விடுமே. அதுபோல் சமுதாயப் பேரியக்கத்தை விட்டு வார்த்தை ஜாலம் எனும் கிலுகிலுப்பை ஆட்டிய கருணாநிதியிடம் சென்றது சமுதாயம். திமுகவில் இருந்து வெளியேறி மக்கள் பேராதரவோடு அதிமுகவை உருவாக்கினார் எம்.ஜி.ஆர். அவர் 1977 முதல் சட்டமன்ற பொதுத் தேர்தலை சந்தித்தபோது கலைஞரோடு முரண்பட்ட முஸ்லிம்லீக் தலைவர் அப்துல் ஸமத் எம்.ஜி.ஆரை ஆதரித்தார். இதுபற்றி செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேள்வி எழுப்பி னார்கள்: முஸ்லிம் லீக் கட்சியினர் சமரசத்துடன் வைத்துக் கொண்டிருந்த உறவை முறித்துக் கொண்டதாக அறிவித்துள்ளார்களே? கருணாநிதி பதில் : “அமைப்பு ரீதியாக உறவு இல்லாவிடினும், முஸ்லிம் சமுதாயத்திற்கும், திமுகழகத்திற்கும் இடையே உள்ள அன்பும், உறவும் என்றும் நிலைத்திருக்கும், அந்த சமுதாயத்துடன் நாங்கள் கொண்டுள்ள தோழமை தேய்பிறை அல்ல! வளர்பிறை!” என்றார். சமுதாயத்திற்கும் - சமுதாய இயக்கத்திற்குமான உறவை விட, திமுகவிற்கும் சமுதாயத்திற்குமான உறவே கெட்டியானது என்பதை தேர்தல் முடிவுகள் வெளிபடுத்தின. 1977 சட்டப்பேரவைத் தேர்தல் எம்.ஜி.ஆர் அவர்கள் முஸ்லிம்லீக்கிற்கு, இதுவரை இல்லாத தொகுதிகளை அதிகமான சீட்டுகளை ஒதுக்கினார். 10 தொகுதிகளை வழங்கினார். ஆனால் எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தார். முஸ்லிம்லீக் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆரின் மக்கள் பேராதரவு அலையில் கலைஞர் சிக்கித் திணறி னார். திமுகவில் இருந்த முன்னணி தலைவர்கள் அதிமுகவில் ஐக்கிய மானார்கள். ஆனால் முஸ்லிம் சமுதாயம் கலைஞரையே தனது தலை வனாக நினைத்தது. கருணாநிதி தோல்வி பள்ளத் தாக்கில் விழுந்து கிடந்த போதும் 13 ஆண்டுகால வனவாசம் என்பார்களே அதுபோன்று 1977 தொடங்கி 1988 எம்.ஜி.ஆர் மரணமடையும் வரை அவரைத் தாங்கிப் பிடித்தது சமுதாயம். எம்.ஜி.ஆரிடம் இருந்த மக்கள் எழுச்சி கண்டு கலைஞர் கருணாநிதி மிரண்டு கிடந்த நிலையில் காயல் பட்டணத்தில் எம்.ஜி.ஆரின் மீது செருப்பு வீசும் அளவுக்கு கலைஞர் பாசம் முஸ்லிம்களிடத்தில் மேலோங்கி இருந்தது. இதுபோன்ற செயல்களால் முஸ்லிம்களுக்கு எதிரானநிலை எடுக்கும் சூழல் எம்.ஜி.ஆருக்கு உருவானது. இந்தளவிற்கு கண் மண் தெரியாத பற்று என்பார்களே அப்படியிருந்த சமுதாயத்திற்கு கலைஞர் செய்தது என்ன? -இன்ஷா அல்லாஹ் தொடரும்... ப.அப்துல் சமது